Connect with us

இலங்கை

உழவு இயந்திரம் மீட்பு: நால்வர் மாயம்!

Published

on

Loading

உழவு இயந்திரம் மீட்பு: நால்வர் மாயம்!

அம்பாறை மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. சடலங்கள்  சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இப் பேரனர்த்தத்திற்கு காரணமான உழவு இயந்திரம் மற்றும் அதன் பெட்டி கனரக இயந்திரம் மூலம் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டன.  இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

Advertisement

சம்பவம் இடம்பெற்ற காரைதீவுக்கு அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா ஆகியோர் உள்ளிட்ட உயரதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.

முப்படையினரும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். விமானப்படை விமானமும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டது.

எனினும்  இதுவரை ( பகல் ஒரு மணி வரை) இரண்டு சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. மேலும் நால்வர் இன்னமும் மாயமாகியுள்ளனர். தேடுதல் தொடர்கிறது.

Advertisement

  காரைதீவு மாவடிப்பள்ளி பிரதான வீதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கிய எட்டு மதரசா மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளத்தில் செவ்வாய்க்கிழமை அள்ளுண்டமை தெரிந்ததே.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன