இலங்கை
கண்டியில் சீனப் பெண்கள் கைது!

கண்டியில் சீனப் பெண்கள் கைது!
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் கண்டி பொலிஸாரால் நேற்றைய தினம் பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 47 மற்றும் 48 வயதுடைய சீனப் பெண்கள் எனவும் தெரியவந்துள்ளது .
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.[ ஒ ]