இலங்கை
கொழும்பில் உள்ள போக்கி ஒன்றில் பயங்கர தீ விபத்து!

கொழும்பில் உள்ள போக்கி ஒன்றில் பயங்கர தீ விபத்து!
கொழும்பில் உள்ள பேக்கரி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக கொஹுவலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (02-12-2024) காலை இடம்பெற்றுள்ளது.
கொஹுவலை பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு அருகில் உள்ள பேக்கரியில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடத்திற்கு தெஹிவளை தீயணைப்புப் பிரிவினர் விரைந்து சென்று தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்தின் போது எந்தவித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்திற்கான காரணமோ அல்லது நஷ்டமோ கணக்கிடப்படவில்லை என்பதுடன்,
கொஹுவல பொலிஸாரும் தீயணைப்பு சேவை திணைக்களமும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.