Connect with us

இலங்கை

ஜனாதிபதி எதையும் நிறைவேற்ற மாட்டார் : ஜீவன் காட்டம்

Published

on

Loading

ஜனாதிபதி எதையும் நிறைவேற்ற மாட்டார் : ஜீவன் காட்டம்

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த எதையும் நிறைவேற்றத் தவறியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் நுவரெலியா மாவட்ட அணித் தலைவர் வேட்பாளருமான திரு.ஜிவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகத்தில் சனிக்கிழமை (26) இடம்பெற்றதாக ஊடக சந்திப்பில் ஜீவன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.

Advertisement

மேலும் கருத்து தெரிவிக்கையில், அரிசி, முட்டை, தேங்காய் ஆகியவற்றின் விலை அதிகரிப்பினால் நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.

தற்போதைய ஜனாதிபதி அதனைக் கட்டுப்படுத்தத் தவறியுள்ளதாகவும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு பெருந்தோட்ட மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது.

பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் தற்போதைய ஜனாதிபதி எந்தக் கருத்தையும் வெளியிடாத நிலையில் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

Advertisement

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் எரிபொருளின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் விலைக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதுடன், தற்போதைய அரசாங்கம் விலைக்கொள்கையின்படி செயற்படாததால், நாட்டில் மேலும் எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் இந்தியாவில் அத்தகைய திட்டம் இல்லை என தெரித்தார்

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன