Connect with us

இலங்கை

தெதுரு ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்- தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

Published

on

Loading

தெதுரு ஓயா பெருக்கெடுக்கும் அபாயம்- தாழ்நிலப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

அடுத்த சில மணித்தியாலங்களில் வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபேகனே, பிங்கிரிய, பள்ளம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவ மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தெதுரு ஓயா பள்ளத்தாக்கில் பராமரிக்கப்படும் ஆற்று நீரின் அளவீடுகளை ஆய்வு செய்ததன் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் சில பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவுக்கு அமைவாக இன்று (26) இரவு நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் குறித்த பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும், அவ்வழியாக செல்லும் வாகன சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

Advertisement

அத்துடன், இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ திணைக்களங்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன