இலங்கை
நெடுந்தீவுக்ககான பயணிகள் படகு பழுது! மூண்டரை மணி நேரமாக குளிருக்கு மத்தியில் காத்திருந்த மக்கள்

நெடுந்தீவுக்ககான பயணிகள் படகு பழுது! மூண்டரை மணி நேரமாக குளிருக்கு மத்தியில் காத்திருந்த மக்கள்
நெடுந்தீவுக்ககான வடதாரகை பயணிகள் படகு பழுது காரணமாக இன்று 4:00 மணிக்கு பயணிக்க வேண்டிய மக்கள் குறிகாட்டுவானில் 3-1/2 மணித்தியாலங்களாக காத்திருந்தனர்.
குறிகாட்டுவானில் இருந்து மாலை 4:00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்க வேண்டிய வடதாரகை பழுது காரணமாக சுமார் மூண்டரை மணித்தியாலங்கள் குறிகாட்டுவானில் காத்திருந்தனர்.
பயணிகள் படகு பழுது காரணமாக நெடுந்தீவு செல்ல முடியாமல் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என நூற்றுக் கணக்கானோர் இரவு 7.20 வரை கடும் குளிரில் குறிகாட்டுவான் இறங்குதுறையில் காத்திருந்துள்ளனர்.
அடிக்கடி பழுதடையும் வடதாரகை மற்றும் படகுகளினால் நெடுந்தீவு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருவதாக அம் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.