இலங்கை
பாக்கு நீரிணையை கடந்த முதலாவது முஸ்லிம்

பாக்கு நீரிணையை கடந்த முதலாவது முஸ்லிம்
(புதியவன்)
திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். நேற்று சனிக்கிழமை அதிகாலை 02:00 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11:00 மணியளவில் நீந்தி முடித்துள்ளார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதான இவர் கடந்த மூன்று மாதங்களாக இச் சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இவருக்கான நீச்சல் பயிற்சிகளை விமானப்படை கோப்ரல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகின்றார்.
பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த இலங்கையின் எட்டாவது நபராகவும், பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த உலகின் முதலாவது முஸ்லிம் நபராகவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.
இலங்கையரான இள வயதையுடைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளையாட்டு வரலாற்றிலே தனது பெயரை பதிந்து கொள்வதற்காக தனது இலக்கினை அடைந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாமல், திருகோண மலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்டியில் வெற்றியாளராக தெரிவாகி இருக்கின்றார்.
பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார். (க)