இலங்கை
புறா தீவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தாக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள்!

புறா தீவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் : தாக்கப்பட்ட சுற்றுலாப்பயணிகள்!
வெளிநாட்டில் இருந்து திருகோணமலை புறா தீவிவுக்கு விடுமுறைக்காக வந்த இருபது பேர் கொண்ட இலங்கையர்கள் குழு ஒன்றுஇ புறா தீவின் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பணியாளர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் அண்மையில் புறா தீவிவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவர்களிடமிருந்து 90 ஆயிரம் ரூபாவை புறா தீவு சுற்றுலா ஊழியர்கள் வசூலித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு,படகு சவாரி மற்றும் நீச்சல் போன்றவற்றுக்கு தேவையான உபகரணங்கள் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் உபகரணங்களை சுற்றுலா பயணிகள் திருப்பிக் கொடுக்கும் போது குறித்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதால் இவ்வாறு பழுதடைந்துள்ளதாக தெரிவித்து மேலதிகமாக 12 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு சுற்றுலா வழிகாட்டிகள் கேட்டுள்ளனர். எனினும் சுற்றுலா பயணிகள் பணத்தை தர மறுத்ததால் சுற்றுலா குழுவில் இருந்த பெண்கள் உட்பட அனைவரையும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சிலர் பொல்லுகளால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஞ)