Connect with us

இலங்கை

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி

Published

on

Loading

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி

மெதமஹனுவர, வத்துலியத்த பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (20) அதிகாலையில் பெய்த கடும் மழையுடன் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

விபத்தில் உறங்கிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன், மண் மற்றும் வீட்டின் சுவர்களுக்கு இடையில் சிக்கிய நிலையில், அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வத்துலியத்த பிரதேசத்தில் வசித்து வந்த 16 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும், நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன