இலங்கை
யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் சேர்ப்பு!

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; ஒருவர் மருத்துவமனையில் சேர்ப்பு!
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி சமூக நலன் சார் செயற்பாட்டாளரின் உறவினரின் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றுமுன்தினம்இரவு இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கு வத்திராயன் கிராமத்தில் வசிக்கும் சமூக நலன் சார் செயற்பாட்டாளர் ஒருவர் கடந்த வாரம் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரவலாக தன்னாலான உதவிகளை செய்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அதே கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி குடிபோதையில் குறித்த சமூக செயற்பாட்டாளரின் உறவினர் ஒருவரை சமூக செயற்பாட்டாளர் என நினைத்து வாளினால் வெட்ட முயன்றுள்ளார் அதனை தடுக்க முயன்ற அவருக்கு கைகளில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த வாள்வெட்டுக்கு இலக்கான நபர் மருதங்கேணி பிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவதுடன் சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.