Connect with us

இலங்கை

வவுனியாவில் ஒன்றுடன் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிள்… இருவர் வைத்தியசாலையில்!

Published

on

Loading

வவுனியாவில் ஒன்றுடன் ஒன்று மோதிய மோட்டார் சைக்கிள்… இருவர் வைத்தியசாலையில்!

வவுனியாவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (02-12-2024) மாலை வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பூங்கா வீதியூடாக வந்த மோட்டார் சைக்கில் பிரதான வீதியான ரயில் நிலைய வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரில் இருந்து ரயில் நிலைய வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்தில் 2 பேர் காயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வைத்தியசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன