இந்தியா
TN Weather Update: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை மையம் தகவல்..!

TN Weather Update: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. வானிலை மையம் தகவல்..!
புதுச்சேரி அருகே நிலவி வந்த ஃபெஞ்சல் புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகில் சனிக்கிழமை இரவு கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, 12 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் புயல் நிலவிவந்தது. இந்நிலையில். ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.