இலங்கை
கொடுப்பனவுகள் தொடர்பில் மீள்பரிசோதனை அறிக்கை கையளிப்பு!

கொடுப்பனவுகள் தொடர்பில் மீள்பரிசோதனை அறிக்கை கையளிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் மீள்பரிசீலனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே.டி. சித்ரசிறியின் தலைமையின் கீழ் நியமிக்கப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கை நேற்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். (ச)