Connect with us

வணிகம்

செயலற்ற அக்கவுண்ட்ஸ்களை மீண்டும் ஆக்டிவேஷன் செய்ய நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கும் SBI

Published

on

செயலற்ற அக்கவுண்ட்ஸ்களை மீண்டும் ஆக்டிவேஷன் செய்ய நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கும் SBI

Loading

செயலற்ற அக்கவுண்ட்ஸ்களை மீண்டும் ஆக்டிவேஷன் செய்ய நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கும் SBI

Advertisement

விதிகளின்படி, இரண்டு ஆண்டுகளுக்கு சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அந்தக் கணக்கு செயலற்றதாக அறிவிக்கப்படும் என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது. அத்தகைய கணக்குகளை மீண்டும் செயல்படுத்த வாடிக்கையாளர்கள் Re-KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) செயல்முறையை முடிக்க வேண்டும். இந்த விழிப்புணர்வின் முக்கியத்துவம் என்னவென்றால், கணக்கில் வழக்கமான பரிவர்த்தனைகளை பராமரிப்பது மற்றும் அவை செயலற்ற கணக்குகளின் வகைக்குள் வராமல் தடுக்கிறது என்பதை எஸ்பிஐ வலியுறுத்துகிறது.

பிரச்சாரத்தின்கீழ், ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (ML) அடிப்படையிலான மாடல்களை செயல்படுத்துவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம் கஸ்டமர் சர்வீஸ் பாயிண்ட்ஸ் (CSP) அவற்றின் ரிஸ்க் ப்ரொஃபைலின் அடிப்படையில் வகைப்படுத்தும். இது வங்கிச் செயல்முறைகளை மிகவும் பாதுகாப்பானதாகவும், திறமையாகவும் மாற்றும்.

Advertisement

எஸ்பிஐ தலைவர் சிஎஸ் ஷெட்டி, PMJDY கணக்குகளை செயலில் வைத்திருக்கவும், வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்தவும் Re- KYC நடைமுறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அனைத்து குடிமக்களுக்கும் நிதிச் சேவைகளை வழங்குவது மற்றும் வங்கி அமைப்பின் ஒவ்வொரு அம்சத்தையும் மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். இந்த பிரச்சாரத்தை வெற்றியடையச் செய்வதில் பிசினஸ் கரஸ்பான்டென்ட் பங்கு வகிக்க வேண்டும் என்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கடைசி மைல் வாடிக்கையாளரையும் சென்றடைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

வளர்ச்சியைத் தக்கவைக்க வங்கி வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இடைவெளியைக் குறைக்கவும், வாடிக்கையாளர்களை மேம்படுத்தவும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். பிசினஸ் கரஸ்பான்டென்ட்கள் சேனலை மேம்படுத்த தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான விஷன் மேப்-ஐ உருவாக்க வேண்டும்.

Advertisement

எஸ்பிஐ-ன் கூற்றுப்படி, இந்த பிரச்சாரம் நிதி உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதற்கும், வாடிக்கையாளர்களின் வங்கி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான படியாகும். வங்கி தனது பிசினஸ் கரஸ்பான்டென்ட் சேனலை மிகவும் பயனுள்ளதாகவும், வாடிக்கையாளர்களை மையப்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை அறிமுகப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன