Connect with us

சினிமா

புஷ்பா-2 ரிலீஸ் நேரத்தில் இப்படியா…! அல்லு அர்ஜுன் மீது எழுந்த அதிரடி புகார்…!

Published

on

Loading

புஷ்பா-2 ரிலீஸ் நேரத்தில் இப்படியா…! அல்லு அர்ஜுன் மீது எழுந்த அதிரடி புகார்…!

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளியான  திரைப்படம் புஷ்பா. இது மிகப்பெரிய அளவில் ஹிட்அடித்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் , ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் லிரிக் வீடியோ செம வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.  இந்த நிலையில் மும்பையில் ப்ரோமோஷன்  நிகழ்ச்சி நடைப்பெற்ற போது நடிகர் அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை army என்று அழைத்துள்ளார் , மேலும் பேசியவர் என் ரசிகர்கள் குடும்பத்தை போன்று என்னுடன் நிற்கிறார்கள் , இந்த படம் வெற்றி பெற்றால் என் ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பணம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.இதையடுத்து நிகழ்ச்சி முடிந்த பின் G.P Environment and Water Harvesting Foundation தலைவர் ஸ்ரீனிவாஸ் army என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ராணுவதினர் நாட்டை பாதுகாப்பவர்கள் , ரசிகர்களை அழைக்க கூடாது என்று அல்லு அர்ஜுன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கூறியுள்ளார் . இந்த சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது .

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன