Connect with us

இலங்கை

கல்வி அமைச்சின் முன் இடம் பெற்ற போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை!

Published

on

Loading

கல்வி அமைச்சின் முன் இடம் பெற்ற போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை!

கல்வி அமைச்சின் முன்பாக கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை என பிரதமரும்இ கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்றுறை கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் நேற்றைய (3) அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது “கல்வி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களின் ஒரு மாதத்துக்கு முன்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டேன்.

Advertisement

கல்வி பிரதி அமைச்சருடனும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்களின் பிரதிநிதிகள் இரண்டு முறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள தரப்பினருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தலையிடுவோம் என்று உத்தரவாதமளித்தோம். இதற்கமைவாகவே அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தேன்.

கல்வி அமைச்சின் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தை அரசாங்கம் அடக்கவில்லை. அங்கு ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்தவே பொலிஸார் தலையிட்டுள்ளனர்.

Advertisement

முறையான திட்டமிடல் இல்லாமல் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் பல்வேறு பிரச்சினைக்கு முகங் கொடுத்துள்ளார்கள். அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக கடந்த  2 ஆம் திகதி போராட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது போராட்டத்தை கலைக்க முற்பட்ட பொலிஸாரில்  ஒரு உப பொலிஸார் பரிசோதகர் 2 பொலிஸார் உத்தியோகத்தர்கள் என மூவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன