Connect with us

உலகம்

கிளர்ச்சியாளர்கள் இலக்குகள் மீது சிரிய, ரஷ்ய விமானங்கள் தாக்குதல்!

Published

on

Loading

கிளர்ச்சியாளர்கள் இலக்குகள் மீது சிரிய, ரஷ்ய விமானங்கள் தாக்குதல்!

சிரியாவின் அலெப்போ, இட்லிப் நகர்களை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சிரிய, ரஷ்ய யுத்த விமானங்கள் கடும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன.

இத்தாக்குதல்களில் பல கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்று ரஷ்ய உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம்

Advertisement

சிரிய இராணுவ கட்டளை தலைமையகத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவளை சிரியாவில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத், ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புட்டின், ஈரான் ஜனாதிபதி மசூட்பெசஸ்கியான், ஈராக் பிரதமர் முஹம்மத் அல் சூடானி உள்ளிட்ட பல தலைவர்களுடன் உரையாடியுள்ளார். ரஷ்யா, ஈரான், சீனா, ஈராக் உள்ளிட்ட நாடுகள் சிரிய ஆட்சியாளர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாசி அராக்‌ஷி சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸூக்கு நேற்று முன்தினம் நேரில் விஜயம் செய்து சிரிய ஜனாதிபதியுடன் நிலமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

Advertisement

பயங்கரவாத நிலைகள் மீதும் அவற்றுக்கான விநியோகப்பாதைகள் மீதும் கடும் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை அலெப்போ பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஞாயிறன்று நடாத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன