Connect with us

இந்தியா

சூரிய ஒளி வட்டத்தை ஆய்வு செய்யும் புரோபா-3… இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி59!

Published

on

சூரிய ஒளி வட்டத்தை ஆய்வு செய்யும் புரோபா-3... இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி59!

Loading

சூரிய ஒளி வட்டத்தை ஆய்வு செய்யும் புரோபா-3… இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி59!

 

Advertisement

சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யவுள்ள ஐரோப்பிய விண்கலன்களை பி.எஸ்.எல்.வி. சி59 ராக்கெட் மூலம், இஸ்ரோ இன்று மாலை விண்ணில் செலுத்த உள்ளது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், புரோபா-3 என்ற திட்டத்தின் கீழ், சிஎஸ்சி மற்றும் ஓஎஸ்சி என்ற இரண்டு விண்கலன்களை உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு விண்கலன்களும் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்ய உள்ளன.

சுமார் 550 கிலோ எடை கொண்ட இந்த விண்கலன்கள், இஸ்ரோவின் ஏவுதளமான சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படவுள்ளன. இதற்கான கவுன்ட்டவுன் ஏற்கெனவே தொடங்கிய நிலையில், இன்று மாலை 4.08 மணிக்கு PSLV சி-59 ராக்கெட் மூலம் இவை விண்ணில் ஏவப்படவுள்ளன.

Advertisement

இந்த விண்கலன்கள், அதிகபட்சம் 60,530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும். சூரிய வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு தகவல்களை இந்த ஆராய்ச்சியில் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன