இலங்கை
தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மர்மபொருடன் அதிரடி கைது!

தமிழர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மர்மபொருடன் அதிரடி கைது!
திருகோணமலை – அன்புவழிபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர், 8 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்றிரவு (03-12-2024) அவரை கைது செய்துள்ளனர்.
இதன்போது தெரியவருவதாவது,
கேரள கஞ்சா கடத்தப்படுவதாக எங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று, சந்தேக நபரை சோதனை செய்த போது, அவரிடமிருந்து 8Kg கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்ப்பட்ட சந்தேக நபரை மேலதிக விசாரணைக்காக திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.