இலங்கை
மின்சாரக் கட்டணத்தை குறிப்பிட்ட வித்தியாசத்தில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்!

மின்சாரக் கட்டணத்தை குறிப்பிட்ட வித்தியாசத்தில் திருத்த நடவடிக்கை எடுக்கப்படும்!
மின்சாரக் கட்டணத்தை குறிப்பிட்ட வித்தியாசத்தில் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் மின்சார விலைகளை நியாயமான வரம்பிற்குள் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொதுமக்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்தாது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
“முந்தைய அரசாங்கங்கள் அவற்றை பல்வேறு நிறுவனங்களுடன் பிணைத்ததால், சில விலை திருத்தங்களை எங்கள் விருப்பப்படி மட்டுமே செயல்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.