Connect with us

இலங்கை

யாழ். மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு நோய்த்தாக்கம்!

Published

on

Loading

யாழ். மாவட்டத்தில் தீவிரமடையும் டெங்கு நோய்த்தாக்கம்!

யாழ். மாவட்டத்தின் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்குத் தொற்று தீவிரம் பெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்;
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்குத் தொற்று தீவிரமாகி வருகின்றது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 453 டெங்குத் தொற்றாளர்கள் இணன்ஹ்கானப்பட்டுள்ளது.

Advertisement

செப்ரெம்பர் மாதம் 42 பேரும், ஒக்ரோபர் மாதம் 69 பேரும், நவம்பர் மாதம் 134 பேரும் டெங்குத் தொற்றுடன் அவதானிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் பார்க்கும்போது நாளுக்குநாள் டெங்குத் தொற்று மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றமை தெளிவாகின்றது.

சாவகச்சேரி, பருத்தித்துறை, கரவெட்டி, கோப்பாய், யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரிகளின் பிரிவுகளிலும் டெங்குத் தொற்று பரவி வருகின்றது.

குறிப்பாக, யாழ்ப்பாணம் மாநகரசபையின் எல்லைக்கு உட்பட்ட கொழும்புத்துறையிலும், கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரியின் பிரிவுக்குட்பட்ட உரும்பிராயிலும் டெங்குத் தொற்று மிக வேகமாகி வருகின்றது – என்றார். (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன