இந்தியா
School Leave: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை… உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்…

School Leave: பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை… உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்…
பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை… உள்ளூர் விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்…
நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனம் பூசும் வைபவத்தை முன்னிட்டு வரும் டிச.12ஆம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் தர்கா ஷரிப் பெரிய கந்தூரி விழா டிச.2ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் 11ஆம் தேதி இரவு புறப்பட்டு, 12ஆம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாநில நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி இடையூறு இல்லாமல்) 12.12.2024 வியாழக்கிழமை அன்று உள்ளுர் விடுமுறை அளித்தும், அதனை ஈடு செய்திடும் விதமாக எதிர்வரும் 21.12.2024 சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவித்தும் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.