இந்தியா
காற்றை கிழித்து விண்ணில் சீறி பாய்ந்த PSLV சி-59 ராக்கெட்! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

காற்றை கிழித்து விண்ணில் சீறி பாய்ந்த PSLV சி-59 ராக்கெட்! விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யவுள்ள ஐரோப்பிய விண்கலன்களை பி.எஸ்.எல்.வி. சி59 ராக்கெட் மூலம், இஸ்ரோ நேற்று மாலை விண்ணில் செலுத்த இருந்தது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், புரோபா-3 என்ற திட்டத்தின் கீழ், சிஎஸ்சி மற்றும் ஓஎஸ்சி என்ற இரண்டு விண்கலன்களை உருவாக்கி உள்ளது. இந்த இரண்டு விண்கலன்களும் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்ய உள்ளன.
சுமார் 550 கிலோ எடை கொண்ட இந்த விண்கலன்கள், இஸ்ரோவின் ஏவுதளமான சென்னை அருகே உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட இருந்தது. இதற்கான கவுன்ட்டவுன் துவங்கி நேற்று மாலை 4.08 மணிக்கு PSLV சி-59 ராக்கெட் மூலம் இவை விண்ணில் ஏவப்பட இருந்தது.
திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும், வானிலை காரணத்தாலும் நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் PSLV சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு (5ம் தேதி) ஒத்திவைக்கப்பட்டது என இஸ்ரோ அறிவித்தது.
இந்நிலையில், இன்று மாலை 4.4 மணிக்கு PSLV சி-59 ராக்கெட் ஐரோப்பிய விண்கலன்களுடன் விண்ணில் வெற்றிகரமாக சீறி பாய்ந்தது. நேற்று திட்டமிட்டு பிறகு ஒத்திவைக்கப்பட்ட PSLV சி-59 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் சீறி பாய்ந்ததைத் தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த விண்கலன்கள், அதிகபட்சம் 60,530 கிலோ மீட்டர் உயரமுள்ள நீள்வட்ட சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டு பின்னர் இணை சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்படும். சூரிய வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு தகவல்களை இந்த ஆராய்ச்சியில் பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.