Connect with us

இலங்கை

பிரபாகரனின் புகைப்படம் தொடர்பில் கைதான இளைஞன் பிணையில் விடுதலை!

Published

on

Loading

பிரபாகரனின் புகைப்படம் தொடர்பில் கைதான இளைஞன் பிணையில் விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞனுக்கு பிணை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் அண்மையில் கைதுசெய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Advertisement

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 72 மணி நேர  விளக்கமறியலுக்குப் பின்னர் இளைஞன் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது,  இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் நீதிவான் விடுவித்ததுடன் வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து உத்தரவிட்டார். (ச)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன