இலங்கை
மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு!

மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயது மாணவன் சாவு!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூளாயைச் சேர்ந்த சிறிபானுசன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இரண்டு மாணவர்கள் இன்று காலை வகுப்பிற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது மறந்துபோய் வீட்டில் விட்டுச் சென்ற பணத்தினை எடுப்பதற்காக திரும்பி வந்துகொண்டிருந்தவேளை அவர்களது மோட்டார் சைக்கிள் மதலுடன் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த இரண்டு மாணவர்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை ஒரு மாணவன் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். (ப)