Connect with us

இலங்கை

யாழில் வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றவேளை அரங்கேறிய சம்பவம்!

Published

on

Loading

யாழில் வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றவேளை அரங்கேறிய சம்பவம்!

யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து தாலிக்கொடி உட்பட்ட சில தங்க நகைகள் என 9 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

Advertisement

நேற்றையதினம் (04-12-2024) குறித்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தவேளை மதியம் வீட்டின் கூரையை பிரித்து இந்த திருட்டு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் குறித்த நகையை திருடிய, அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்றையதினம் (05-12-2024) கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

இதன்போது அவர் திருடிய நகையும் மீட்கப்பட்டது. அவர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன