Connect with us

இலங்கை

ஹந்தான மலையில் காணாமல் போன மாணவர்கள் மீட்பு

Published

on

Loading

ஹந்தான மலையில் காணாமல் போன மாணவர்கள் மீட்பு

கொழும்பில் உள்ள பிரதான பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 10 மாணவர்கள் கொண்ட குழுவொன்று கண்டி ஹந்தான மலையை பார்வையிடச் சென்று காணாமல் போயிருந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பின்னர், இராணுவத்தினர் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

Advertisement

16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.

ஹந்தான மலையை பார்வையிட சென்ற அவர்கள், அங்குள்ள பாதுகாப்பற்ற பகுதிக்கு சென்றுள்ளனர்.

இதன்போது ஒருவருக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டதாலும், மூடுபனி காரணமாகவும் வழியைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், திரும்பிச் செல்ல முடியாமல் தவித்ததாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.

Advertisement

இது தொடர்பில் இராணுவத்தினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து 111 ஆவது படைப் பிரிவின் தலைமையகம் மற்றும் 2 ஆவது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் குறித்த குழுவினரை பத்திரமாக மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதன்படி இரவு 8.00 மணியளவில் இந்த மாணவர்களை மீட்கும் நடவடிக்கையை ஆரம்பித்த இராணுவத்தினர், விடியும் வேளையில் மாணவர்களை பத்திரமாக கீழே இறக்கியுள்ளனர்.  (ப)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன