Connect with us

இலங்கை

அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரகடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்!

Published

on

Loading

அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரகடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்!

இலங்கை  கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 இராமேஸ்வரகடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை மன்னார் நீதவான் நேற்று (05) வியாழக்கிழமை பிறப்பித்துள்ளார்.

Advertisement

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த நான்காம் திகதி காலை மீன் பிடிக்க சென்ற கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரால் நேற்று (50) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.இரண்டு இந்திய இழுவைப் படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மற்றும் இழுவைப் படகுகளும் தலைமன்னார் கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.இதையடுத்து, தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் குறித்த கடற்றொழிலாளர்களை நேற்று (05) மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுத்தப்பட்டனர்.

Advertisement

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 14  இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர் வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.  (ப)

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன