இலங்கை
எருமைகளுடன் மோதி 5 இளைஞர்கள் விபத்து!

எருமைகளுடன் மோதி 5 இளைஞர்கள் விபத்து!
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் காயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட – பாசிக்குடா பிரதான வீதியில் வியாழக்கிழமை (05) இரவு இடம்பெற்றுள்ளது.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் ஐந்து பேர் அதிவேகமாக பயணித்த போது வீதியில் நின்ற எருமை மாடுகளுடன் மோதியுள்ளனர்.
இதில்இ ஒரு எருமை உயிரிழந்துள்ளதுடன்இ நான்கு எருமைகள் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஐந்து இளைஞர்களும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் வாழைச்சேனை ஆதார மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பின்னர் ஐந்து இளைஞர்ளும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு இட மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (ப)