இந்தியா
கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் இன்று மாலை அறிவிக்கப்படும்

கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் இன்று மாலை அறிவிக்கப்படும்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த கட்டுப்பாடுகள் இன்று மாலை அறிவிக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்,
இன்று (06) மாலை திருவண்ணாமலை மாவட்ட அமைச்சர், அறநிலையத்துறை செயலாளர், மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. அந்த கூட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவில் உள்ள சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு, எவையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமோ அவற்றை பரிசீலித்து, வருகின்ற பக்தர்களின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு இன்று மாலை முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
காரணம், திருவண்ணாமலையில் நடக்கக்கூடாத சோகம் ஒன்று நடந்திருக்கிறது. அதையும் கருத்தில் கொண்டு ஆய்வின் இறுதியை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று கார்த்திகை தீபத் திருவிழா கட்டுப்பாடுகள் இன்றே அறிவிக்கப்படும். என்றார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.