இலங்கை
குடிபோதையில் விபத்து… முன்னாள் இராஜாங்க அமைச்சர் மீண்டும் கைது!

குடிபோதையில் விபத்து… முன்னாள் இராஜாங்க அமைச்சர் மீண்டும் கைது!
பதிவு செய்யப்படாத அதிசொகுசு காரொன்று மிரிஹானையிலுள்ள வீடொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்ப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே பிணையில் விடுவிக்க நீதிமன்றம் நேற்றையதினம் (05-12-2024) உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.