Connect with us

சினிமா

‘புஷ்பா 2’ படம் பார்க்க வந்த பெண் உயிரிழப்பு.. அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறை முடிவு

Published

on

'புஷ்பா 2' படம் பார்க்க வந்த பெண் உயிரிழப்பு.. அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறை முடிவு

Loading

‘புஷ்பா 2’ படம் பார்க்க வந்த பெண் உயிரிழப்பு.. அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறை முடிவு

செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு அல்லு அர்ஜுன் நடித்திருந்த புஷ்பா திரைப்படம் 2021ல் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. படத்தின் 2-வது பாகம் உலகம் முழுவதும் இன்று 12ஆயிரம் தியேட்டர்களில் வெளியானது. புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சி ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நேற்று இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. அப்போது, படத்தை ரசிகர்களுடன் காண நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா சந்தியா தியேட்டருக்கு வந்திருந்தனர்.

Advertisement

படத்தை விட இருவரையும் காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. கட்டுப்படுத்த முடியாத கூட்டம், கரகோஷம் என நிலைமை எல்லை மீறி போக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் வேறு வழியின்றி தடியடி நடத்த ஆரம்பித்தனர். போலீசாரை கண்டு ஆட்டம் போட்ட ரசிகர்கள் தலைதெறித்து ஓட எல்லாம் தலைகீழானது.

அப்போது குடும்பத்துடன் படம் பார்க்க வந்த 35 வயதான ரேவதி மற்றும் 9 வயதான அவரது மகன் ஸ்ரீதேஜா இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது அங்கும் இங்கும் ஓடிய ரசிகர்கள், இருவர் மீதும் ஏறி மிதித்ததில் படுகாயமடைந்தவர்கள், மூச்சுப் பேச்சின்றி சுயநினைவை இழந்தனர். பின்னர் அவர்களை மீட்டு முதலுதவி அளித்த போலீசார், ஆர்டிசி கிராஸ்ரோட்டில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாய் ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்தனர்.

தற்போது, சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில், நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கூட்ட நெரிசலில் சிக்கி மேலும் பலர் காயமடைந்துள்ள நிலையில் வழக்குப்பதிவு செய்து சிக்கடப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு தெரிவித்துள்ளனர். புஷ்பா 2 திரைப்படம் பார்க்க குடும்பத்துடன் வந்த தாய், மகன் கூட்ட நெரிசலில் சிக்கி, தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Also Read :
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா புஷ்பா 2..? படம் எப்படி இருக்கு..?

இதனிடையே கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மீது போலீசார் வழக்குப்பதிவு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்தியா திரையரங்கு மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அல்லு அர்ஜூன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன