Connect with us

இலங்கை

வவுனியாவில் பெரும் சோகம்… ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

Published

on

Loading

வவுனியாவில் பெரும் சோகம்… ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!

வவுனியாவில் உள்ள பேராறுநீர்த்தேக்கத்தின் வான் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நபர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்றையதினம் (06-12-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

குறித்த சம்பவத்தில் சம்பவத்தில் தரணிக்குளம் பகுதியை சேர்ந்த குரு என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று மாலை பேராறுநீர்த்தேக்கத்தின் வான்பகுதியில் நபர் ஒருவர் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில் நீருக்குள் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளார்.

Advertisement

இதனை அவதானித்த மற்றொரு நபர் சம்பவம் தொடர்பாக ஊர்மக்களுக்கு தெரியப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து குறித்த நபரை தேடும் பணி ஊர்மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட நேரமாக தேடுதல் இடம்பெற்றுவந்த நிலையில் சில மணித்தியாலங்களின் பின்னர் அவரது சடலம் நீருக்குள் இருந்து மீட்கப்பட்டது.

Advertisement

சம்பவம் தொடர்பாக ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன