இலங்கை
அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்..!

அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்..!
2025 ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
2025 வருடத்தின் முதல் நான்கு மாதங்களுக்கான அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு கடந்த 03ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைய, நேற்று முன் தினமும் நேற்றைய தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெற்றது.
விவாதம் முடிவடைந்ததும் குறித்த தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.