இலங்கை
மது போதையில் வாகனம் செலுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது!

மது போதையில் வாகனம் செலுத்திய முன்னாள் இராஜாங்க அமைச்சர் கைது!
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, குடிபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக விபத்துக்குள்ளானதை அடுத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் ரத்வத்தவின் வாகனம் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தின் போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் மது போதையில் வாகனம் செலுத்தியிருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.