இலங்கை
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கையில் மாற்றம்!

சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கையில் மாற்றம்!
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை நாளை திங்கட்கிழமை(9) முதல் இரண்டு லட்சமாக அதிகரிக்கப்படும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்குச் சொந்தமான தென்னந்தோப்புக் காணிகளிலுள்ள தேங்காய்கள் சதொச ஊடாக விற்பனை செய்யப்படுவதாகவும், கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் சதொச நிறுவனத்திடமிருந்து தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அமைச்சு மேலும் குறிப்பிடுகிறது. (ச)