Connect with us

இலங்கை

மட்டக்களப்பில் 3 நாட்களாக காணாமல் போயுள்ள குடும்பஸ்தர்! தவிக்கும் குடும்பம்

Published

on

Loading

மட்டக்களப்பில் 3 நாட்களாக காணாமல் போயுள்ள குடும்பஸ்தர்! தவிக்கும் குடும்பம்

மட்டக்களப்பில் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில் மனைவி இன்றையதினம் (08-12-2024) பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இச்சம்பவத்தில் வடமுனை, ஊத்துச்சேனையைச் சேர்ந்த 55 வயதுடைய சிவசுப்பிரமணியம் குருநாதன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 05-12-2024 ஆம் திகதி, மட்டக்களப்பு – திரும்பெருந்துறையில் உள்ள வாகனம் திருத்துமிடத்திற்கு தனது முச்சக்கரவண்டியை கொண்டு சென்றவர், இதுவரை வீடு திரும்பவில்லையென உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும், அவரது தொலைபேசியின் தொடர்பும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இவரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேடியும் எதுவித தகவலும் கிடைக்கவில்லையென உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இவரை கண்டவர்கள் தகவல் தருமாறும் பொலிஸில் காணாமல் போனவரின் மனைவி கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன