இலங்கை
இலங்கையில் அதிகரித்த எண்ணிக்கை: குடிவரவு, குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையில் அதிகரித்த எண்ணிக்கை: குடிவரவு, குடியகல்வு திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!
நாட்டில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் கடவுச்சீட்டை வழங்குவதற்கான நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பொன்றை வெளியிட்டு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும்.