இலங்கை
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) பணிப்பாளர் கைது!

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) பணிப்பாளர் கைது!
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தல் மற்றும் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்ட வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.