Connect with us

இலங்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை

Published

on

Loading

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி விபத்தொன்றை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு அழைத்து வரப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

லொஹான் ரத்வத்த கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அவர் ஓட்டிச் சென்ற ஜீப் மற்றுமொரு காருடன் மோதி கடந்த 6ஆம் திகதி விபத்து ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன