இலங்கை
யாழ். மூளாயில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!

யாழ். மூளாயில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது!
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் – வேரம் பகுதியில் 3 கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபரான 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரிடம் வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது அவரிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ச)