Connect with us

இலங்கை

அதிக விலைக்கு அரிசி ; இன்று முதல் சுற்றிவளைப்பு

Published

on

Loading

அதிக விலைக்கு அரிசி ; இன்று முதல் சுற்றிவளைப்பு

  இலங்கையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டுபிடிக்கும் வகையில் இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் (09) அரிசிக்கான அதிகபட்ச விலையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

Advertisement

புதிய அரிசி விலை அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், அதற்கு மேல் அரிசி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் வணிக சமூகம், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தங்கள் அரிசியின் அளவை நாங்கள் பகிரங்கப்படுத்திய விலைக்கு ஏற்ப வாங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அரிசி விற்பனையில் ஏதேனும் முறையற்ற அல்லது அதிக விலை இருந்தால், அவர்கள் அதைப் பற்றி முறைப்பாடு செய்யலாம்.

Advertisement

நுகர்வோர் அதிகார சபையின் 1977 என்ற இலக்கத்திற்கு மாவட்ட அலுவலகங்கள் மற்றும் நுகர்வோர் அதிகார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன