Connect with us

இலங்கை

சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஹரிணி

Published

on

Loading

சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஹரிணி

2025 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளின் தேவையை முழுமையாக வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்

2025ஆம் ஆண்டிற்கான இலங்கையிலுள்ள சகல பாடசாலைகளினதும் பிள்ளைகள் மற்றும் ஊழியர்களுக்கான சீருடைகளை வழங்கிய சீன அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

Advertisement

2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

சீன அரசாங்கத்தின் மானியமாக பெறப்பட்ட பாடசாலை சீருடைகளை சீன தூதுவர் Key Zheng Hong இன்று பிற்பகல் கொழும்பு துறைமுக சர்வதேச கொள்கலன் முனையத்தில் வைத்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கையளித்தார். 

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளின் தேவை 11,817 மில்லியன் மீற்றர் துணி மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 4,640,086 ஆகும்.

Advertisement

அதன்படி, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகளின் முழுத் தேவையும் சீன மக்கள் குடியரசால் மானியமாக வழங்கப்பட்டது.

மூன்று ஏற்றுமதிகளில் உரிய அளவு துணிகள் இலங்கையில் பெறப்படும் மற்றும் முதல் மற்றும் இரண்டாவது ஏற்றுமதி ஏற்கனவே இலங்கைக்கு வந்துவிட்டன.

மூன்றாவது கப்பல் டிசம்பர் 25 ஆம் திகதி இலங்கைக்கு வர உள்ளது.

Advertisement

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய,

கல்வி எமது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது, எமது அரசாங்கம் கல்விக்கு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது.

நாம் அபிவிருத்தி அடைய கல்வி ஒரு அடிப்படை வழிமுறையாகும். எந்தவொரு சமூக-பொருளாதார வேறுபாடு அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பிள்ளைகளும் கண்ணியத்துடன் கல்வியை அணுக கல்வியில் முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.

Advertisement

அதற்கான பல முன்மொழிவுகளை நாங்கள் ஏற்கனவே முன்வைத்துள்ளோம்.

பாடசாலை சீருடைக்கான பொருட்களை வழங்குவதில் சீனாவின் பெருந்தன்மை எங்களுக்கு மிகவும் முக்கியமானது, இல்லாவிட்டால் இதற்கான நிதியை நாங்கள் தேட வேண்டியிருக்கும்.

2025 ஆம் ஆண்டில், நமது நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் உள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் சீருடை வழங்கும் பணியை சீனா மேற்கொண்டுள்ளது.

Advertisement

இது சீனாவிடமிருந்து கிடைக்கும் முக்கியமான நன்கொடை என்றும், இதற்கு அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இதில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, தூதரக அதிகாரிகள், கல்வி அமைச்சின் அதிகாரிகள், துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன