Connect with us

இலங்கை

தன்னை இவ்வாறு அழையுங்கள்… யாழ்.வைத்தியசாலை பணிப்பாளரை வலியுறுத்திய அர்ச்சுனா எம்.பி!

Published

on

Loading

தன்னை இவ்வாறு அழையுங்கள்… யாழ்.வைத்தியசாலை பணிப்பாளரை வலியுறுத்திய அர்ச்சுனா எம்.பி!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மீண்டும் குழப்பம் விளைவிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வருவாரெனின், வாசலிலேயே தடுத்து வைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (10-12-2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வைத்தியர் த.சத்தியமூர்த்தி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதன்போது அவர் மேலும் தெரியவித்ததாவது,

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த எம்.பி அர்ச்சுனா, தான் தற்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும், தன்னை “சேர்” என்று அழைக்குமாறும் கூறி எம்மோடு முரண்பட்டார்.

அவரை சேர் என்று அழைக்க முடியாது என்று பதிலளித்ததற்கு, என்னை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து அகற்றுவேன் எனவும், நாடாளுமன்றத்திற்கு அழைத்து கேள்வி கேட்பேன் என்றும் கூறினார்.

Advertisement

மேலும் என்னை வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லுமாறு கூறினார்.

இந்நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைந்து எம்.பி அர்ச்சுனா குழப்பம் விளைவிப்பதற்கு இடமளிக்க முடியாது.

மீண்டும் ஒருமுறை அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க முற்படுவராயின் அவர் வாசலிலேயே தடுத்து வைத்து, பாதுகாப்பு அதிகாரிகளால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன