இலங்கை
மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை துரத்திச் சென்ற அதிரடிப்படை!

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை துரத்திச் சென்ற அதிரடிப்படை!
பருத்தித்துறையில் இருந்து மணல் கடத்தப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிப்பரை விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றனர்.
இதன்போது குறித்த டிப்பர் கொடிகாமம் ஊடாக மந்துவில் பகுதியால் டிப்பர் தப்பிச் சென்று கொண்டிருந்தத வேளை மண்ணை வீதியில் கொட்டி விட்டு, சாவகச்சேரி – கைதடி வீதியால் செல்லும்போது அவ்விடத்தில் வைத்து டிப்பருடன் சாரதி மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ச)