இலங்கை
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்… ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்… ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் ஆரம்பம்!
இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சுகளின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட பரிந்துரைகள் குறித்த கலந்துரையாடல் இன்றையதினம் (10-12-2024) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர்.நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட அமைச்சுக்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.