Connect with us

இந்தியா

அதானியைக் காப்பாற்ற சொரெஸ் விவகாரத்தை கிளப்பும் பா.ஜ.க: காங்கிரஸ் பதிலடி

Published

on

Congress hits back BJP raising Soros issue to save Adani Tamil News

Loading

அதானியைக் காப்பாற்ற சொரெஸ் விவகாரத்தை கிளப்பும் பா.ஜ.க: காங்கிரஸ் பதிலடி

சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.குற்றச்சாட்டு இந்நிலையில், இந்த விவகாரம் இந்தியாவில் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்துள்ளார். இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.இதையடுத்து, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த சில நாட்களாக அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சொரெசின் நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டி வருகிறது. ஜார்ஜ் சொரெஸ் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள பா.ஜ.க அவரது நிறுவனத்துடன் சோனியா காந்திக்கு தொடர்பு இருப்பதாக கூறி வருகிறது. பதிலடிஇந்த விவகாரத்தை தற்போது  நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டுமென பா.ஜ.க எம்.பி.க்கள் கோரிக்கை  விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியை பாதுகாப்பதற்காக மட்டுமே, அமெரிக்க முதலீட்டாளர் ஜார்ஜ் சொரெஸ் – சோனிய காந்தி பிரச்சினையை கிளம்புவதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. “ஜார்ஜ் சொரெஸ் தேசவிரோத செயல்களில் ஈடுபட்டிருந்தால், ஏன் இந்தியாவில் அவரது வணிகம் தொடர்ந்து இயங்குகிறது என்றும், அவரை நாடு கடத்துவதற்கு அரசாங்கம் ஏன் முயலவில்லை என்றும் எதிர்க்கட்சியினர் கேட்டனர். ஜார்ஜ் சொரெசுக்கு நிதியுதவி செய்யும் ஐ.நா ஜனநாயக நிதியத்திற்கு இந்திய அரசு ஏன் 9,00,000 அமெரிக்க டாலர்களை வழங்கியது?” என்று காங்கிரஸ் கேள்வி  எழுப்பியுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (ஏ.ஐ.சி.சி) தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், “கவுதம் அதானியை காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் என்பது நாடு அறிந்ததே” என்றார்.காங்கிரஸின் ஊடகங்கள் மற்றும் விளம்பரத் துறையின் தலைவர் பவன் கேரா, “எனவே, பிரதமரின் ஆலோசகரும், இந்திய அரசாங்கத்தின் செயலாளருமான டாக்டர். ஷமிகா ரவி, ஜார்ஜ் சொரஸ் நிதியளித்த ஓபன் சொசைட்டி அறக்கட்டளையிலிருந்து மானியத்தைப் பெற்றார். பிரதமர் அலுவலகம் அவரை நீக்கிவிட்டு, இந்தியாவை சீர்குலைக்க அவர் என்ன செய்தார் அல்லது என்ன செய்தார் என்று விசாரணை நடத்துமா? என்று அவர் கேள்வி எழுப்பினார். டாக்டர். ஷமிகா ரவியிடம் கருத்து கேட்க முடியன்ற நிலையில், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன