இலங்கை
ஆசிய அபிவிருத்தி வங்கி; மின்சார சபைக்கு 30 மில். டொலர்!

ஆசிய அபிவிருத்தி வங்கி; மின்சார சபைக்கு 30 மில். டொலர்!
இலங்கை மின்சார சபைக்கு 30 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
எரிசக்தி துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களின் நிலைத்தன்மையை உறுதிசெய்ய இந்த நிதியுதவி உதவும் என்று தனது அறிக்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் 70 வீதமான மின்சார உற்பத்தியை புதுப்பிக்கத்தக்க மூலாதாரங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் திட்டத்தை அடைய உரிய வேலைத்திட்டங்களை இலங்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவுறுத்தியுள்ளது. (ச)