Connect with us

இலங்கை

இந்தியப் பிரதமர் மோடியை சந்திப்பார் ஜனாதிபதி அநுர

Published

on

Loading

இந்தியப் பிரதமர் மோடியை சந்திப்பார் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக எதிர்வரும் 15ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இந்த விடயம் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்துவாரா என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

Advertisement

இந்த நிலையிலேயே, எதிர்வரும் 15ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்தப் பயணத்தின்போது, இந்தியப் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பில் ஈடுபடவுள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியுடன், வெளிவிவகார அமைச்சர் மற்றும் பிரதி நிதி அமைச்சர் ஆகியோரும் இந்தியாவுக்குச் செல்லவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன