இந்தியா
பாண்டியர்களின் கொடியில் இருக்கும் மடவா மீன்… இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா..?

பாண்டியர்களின் கொடியில் இருக்கும் மடவா மீன்… இதுல இவ்வளவு நன்மைகள் இருக்கா..?
மடவா மீன்
வெள்ளி நிறத்தில் விரல் அங்குலம் நீளத்தில் தட்டையான தலை, முக்கோணமான வாய், மழுங்கான மூக்கு உடைய மடவை என்கிற மடவா மீன். இதற்கு சிறையான் என்கிற மற்றொரு பெயரும், ஆங்கிலேயத்தில் Mullet Fish என்ற பெயர் உள்ளது. கடல்நீரிலும், நன்னீரிலும் வாழும் மித வெப்பமான, வெப்ப வலயப் பகுதியிலும் சில வகை இனங்கள் நன்னீரிலும் வாழ்கின்றன.
இதன் தனித்தனி சிறப்பு முதுகு இரண்டு மற்றும் வயிற்றுப் பகுதியில் இரண்டு துடுப்புகள் இருக்கும். இதன் தோற்றம் பாண்டியர்களின் கொடியில் இருப்பதால் தமிழர்களின் வரலாற்றுடன் நெருங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. 50 முதல் 100 செ.மீ வரை இதன் வளர்ச்சியும் எட்டு கிலோகிராம் வரை எடை இருக்கும். சதைப்பகுதியின் வெளியில் செதில்கள் நிறைந்தும் உள்பகுதியில் முட்கள் காணப்படும். தலை முதல் வால் வரை ஆறு நேர்கோடுகள் காணப்படும்.
கடல்பாசிகள், பூச்சிகள், மீன் குஞ்சுகள் போன்ற சிறியவகை உயிரினங்கள் உணவாக எடுத்துக்கொள்கிறது. கூட்டமாக வாழும் இவை கடலில் நீந்தி செல்லும்போது துள்ளி குதித்துச் செல்லும் இதை வைத்து மீனவர்கள் அதன் கூட்டத்தில் வலையை வீசி இவற்றைப் பிடிப்பதாகத் தெரிவித்தனர்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் பார்வை குறைபாட்டினை சரிசெய்து இரத்த அழுத்தத்தினை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாகப் பாதுகாக்கவும் உதவுகிறது. வைட்டமின் பி6, செலினியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. புரதச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. குழம்பு, கிரேவி மற்றும் வறுவல் வைத்து சாப்பிட சிறந்த மீனாக இருக்குமாம்.